தலைமை செயலகம் முன் மற்றொரு தற்கொலை முயற்சி
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் முன்பாக கெரசினை ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்த நபரைப் போலீசார்கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த குருசாமி (45) சாலை பழுது பார்க்கும் பணியாளராக வேலை பார்த்துவந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருடைய வேலை திடீரென்று பறிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் வேறுஏதும் வேலை கிடைக்காமல் குடும்பத்தைக் கூட நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
தனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவில் ஏற்கனவே மூன்றுமுறை மனு கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில் சுதந்திர தினமான நேற்று மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு குருசாமி வந்தார். ஆனால் சுதந்திரதினத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் போலீசார் அவரை உள்ளே நுழையவிடவில்லை.
இதையடுத்து திரும்பிச் சென்ற குருசாமி சிறிது நேரத்தில் ஒரு கெரசின் டின்னுடன் மீண்டும் வந்தார். தலைமைச்செயலகத்தின் முன்பாகவே நடு ரோட்டில் நின்று கொண்டு திடீரென்று கெரசினைத் தன் தலையில் ஊற்றித்தீக்குளிக்க அவர் முயற்சித்தார்.
இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட போலீசார் விரைந்து சென்று அவரைத் தீக்குளிக்க விடாமல் தடுத்து கைது செய்தனர்.
குருசாமியிடம் விசாரணை நடத்திய பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்து அவரைப்போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications