போதையில் தேசியக் கொடியை அவமதித்த காட்டுமிராண்டிகள்
சென்னை:
குடித்து விட்டு போதை தலைக்கேற கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை அவிழ்த்து தங்களது தலையில்கட்டிக் கொண்டு கலாட்டா செய்த 2 காட்டுமிராண்டிகளை போலீஸார் கைது செய்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை அசோக் நகர் பகுதியில் அந்தப் பகுதி மக்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.தேசிய கீதம் இசைக்க அவர்கள் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் ஹரிகுமார் ஆகிய இரு இளைஞர்கள் குடிபோதையில் தட்டுத் தடுமாறி வந்து கொண்டிருந்தனர்.
கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியைப் பார்த்தவுடன், குடிபோதையில் இருந்தஅவர்களுக்கு போதை அதிகமானது. இதைத் தொடர்ந்து ஹரிக்குமார் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடியைஇறக்கினான்.
கொடி கீழே வந்தவுடன் அதைக் கழற்றி தலைப் பாகை போல கட்டிக் கொண்டு, நான்தான் பாபா என்றுகூறியவாறே அங்கிருந்த மக்களிடம் சில்மிஷம் செய்தான்.
உடன் வந்த அவனது நண்பன் லோகேஸ்வரன், நீ மட்டுமா பாபா, நானும்தான் பாபா என்று கூறியவாறேஅவனிடமிருந்து கொடியைப் பறித்து தனது தலையில் கட்டிக் கொண்டான்.
இந்த இளைஞர்களின் செயலைப் பார்த்து கொதித்துப் போன அந்தப் பகுதி மக்கள் அசோக் நகர் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் இரண்டு பேரையும் தெருவில் வைத்து அடித்துஉதைத்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று தேசியக் கொடியை அவமதித்தாக வழக்குப் பதிவுசெய்து உள்ளே தள்ளினர்.












Click it and Unblock the Notifications