காவிரி ஆணையக் கூட்டம்: ஜெ. பங்கேற்கிறார்
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என்றுதெரிகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் தவிர கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநில முதல்வர்களும் இதில் உறுப்பினர்களாகஉள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த 9ம் தேதி ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் நான்குமாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நதி நீர் ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டது.
அதன்படி அடுத்த வாரத்தில் காவிரி ஆணையத்தின் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிகிறது.
காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவுஇருப்பதால் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இதில்பங்கேற்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications