சென்னை- மதுரை இடையே புதிய பகல் நேர ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை- மதுரை இடையே பகல் நேர புதிய ரயில் இயக்கப்படும் என ரயில்வேதுறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை- மதுரை இடையே பயணிகள் கூட்டம் மிக அதிகமாகிக் கொண்டே போகிறது. அதை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது தென்னக ரயில்வே.

இந் நிலையில் தென்னக ரயில்வேயின் மண்டல மேலாளர்கள், கண்காணிப்பு மேலாளர்களுடன் ஆலோசனை நடத்திய மூர்த்தி பகல் நேரரயில் இயக்குவது குறித்து விவாதித்தார். இதையடுத்து தினமும் காலை 7 அல்லது 8 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து மதுரைக்கு ஒருரயிலை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்த ரயில் இயக்கப்படும் என மூர்த்திபின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதே போல சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான ரயில் பாதைகளில் ஒன்றை அகலப் பாதையாக்கி பெரிய மின்சார ரயில்களைஇயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பின்னர் இந்தப் பாதை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும் என்றார்.

திருச்சிக்கு கூடுதல் பெட்டிகள்:

அதே போல சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 தூங்கும் வசதி பெட்டிகளைஇணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

மலைக்கோட்டை ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதால் கூடுதல்பெட்டிகளை இணைக்க கோரிக்கைவிடப்பட்டது.

இந்தக் கோரிக்கையை உடனடியாக அமலாக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டதால் அதை ஏற்று அடுத்த மாதம் 10ம் தேதி முதல் இந்தரயிலில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+