சுப.வீரபாண்டியன் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
வேலூர்:
தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்
இதுதொடர்பாக தனது வக்கீல் மூலம் வேலூர் சிறையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொடாசட்டத்தை மறுபடியும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது பாசிச அதிமுக அரசு.
தமிழர் தேசிய இயக்கம் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையைத் தூண்டியதில்லை, வன்முறையில் ஈடுபட்டதும்இல்லை. அதிமுக அரசின் இந்த அராஜகப் போக்கை அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும்.
ஜனநாயகத்தை நசுக்கும் செயல் இது என்று கூறியுள்ளார் வைகோ.
க்யூ பிராஞ்ச் சோதனை:
இந் நிலையில் வீரபாண்டியனின் வீட்டில் க்யூ பிராஞ்ச் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தினர்.
பேட்டி:
சிறைக்குக் கொண்டு செல்லப்படும் முன் போலீஸ் வேனில் இருந்தபடி நிருபர்களிடம் பேசிய வீரபாண்டியன், நாட்டில் இருக்கிற பசி,பஞ்சத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, இல்லாத தீவிரவாதத்தைச் சொல்லி எங்களைக் கைது செய்கிறார்கள்.
இதற்கு வரலாறு பதில் சொல்லும். காலம் எங்களை விடுதலை செய்யும்.
தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சியா இல்லை சந்திரிகா ஆட்சியா என்ற சந்தேகம் வருகிறது என்றார்












Click it and Unblock the Notifications