திமுகவினர் மீது போலீஸ் தாக்குதல்: தமிழகம் முழுவதும் நாளை கண்டனப் பேரணி
சென்னை:
மதுரையில் நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கிய திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துஅக்கட்சியினர் நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளைநடத்துகின்றனர்.
கடந்த 9ம் தேதி மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் ஏழை நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்குதிமுகவினர் ஏற்பாடு செய்தனர். அதற்கு சுமார் 200 அடி தொலைவிலேயே நெசவாளர்களுக்கு முட்டை பிரியாணிவழங்கும் நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் அன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென்று திமுகவினர் மீது போலீசார்தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்பட பல திமுகவினர்காயமடைந்தனர்.
மேலும் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் ஆகியோர் உள்படசுமார் 100 திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து காயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் உள்பட ஐந்து திமுகவினரையும் போலீசார் கைதுசெய்தனர்.
இதற்கிடையே கடந்த 11ம் தேதி அவசரமாகக் கூடிய திமுக நிர்வாகக் குழு, போலீசாரின் இந்த அராஜகச் செயலைக்கண்டித்து 19ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும்பேரணி நடத்த முடிவு செய்தது.
அதன்படி நாளை திமுகவினர் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவுள்ளனர். சென்னை பேரணிக்கு முன்னாள்அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், திருச்சியில் நடக்கும் பேரணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும்,கடலூர் பேரணிக்கு க. சுந்தரமும், தஞ்சாவூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், வேலூர் பேரணிக்குதிமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலினும், கரூர் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும்தலைமை வகிக்க உள்ளனர்.
ஜாமீன் கிடைத்தும் சிறையில் திமுகவினர் தவிப்பு:
இதற்கிடையே ஜாமீன் கிடைத்த பிறகும் 100 திமுகவினர் மதுரை சிறையிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
பழனிவேல்ராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 100 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆனால் ஜாமீன் விடுதலை வழங்குவதற்கான உத்தரவு அன்று மாலை வரை சிறை அதிகாரிகளுக்கு வரவில்லை.இதனால் வெள்ளிக்கிழமை திமுகவினர் சிறையை விட்டு வெளியே வர முடியவில்லை.
மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் திமுகவினர் வெளியே வர முடியாமல் சிறைக்குள்ளேயேதவித்துக் கொண்டிருக்கின்றனர். நாளை காலை தான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications