அரியலூர் துணை மின் நிலையத்தை தகர்க்க சதி: வெடிகுண்டுகளுடன் 5 தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
அரியலூர் துணை மின் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க சதி செய்த 5 தீவிரவாதிகளைப் போலீசார் கைதுசெய்தனர்.
அரியலூர் அருகே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு டாடா சுமோ காரில் ஏராளமான வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் ஆயுதங்கள்ஆகியவை இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றைக் கைப்பற்றிய போலீசார் உடனே அந்தக் காரிலிருந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் அனைவரும் தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் அரியலூரில் உள்ள துணைமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதற்காகத் தான் அவர்கள் சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்தது.
பின்னர் அந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications