புதுக்கோட்டை: கார் - ரயில் என்ஜின் மோதலில் தம்பதி, மகன் பலி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே ஆளற்ற ரயில்வே கிராசிங்கில் நுழைந்த கார் மீது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ரயில்என்ஜின் மோதியதில் காரிலிருந்த ஒரு தம்பதியரும் அவர்களுடைய மகனும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (65) என்பவர் தன்மனைவி சிவகாமி (55) மற்றும் மகன் சரவணன் (40) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.சொக்கலிங்கம் சென்னையில் கார் விற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் கிராமத்தில் உள்ள கருப்பர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக அவர்கள்நேற்று சென்று கொண்டிருந்தனர்.

நேற்று காலை சுமார் 11 மணிக்கு திருமயம் அருகே சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஆளற்ற ரயில்வேகிராசிங்கை அவர்களுடைய கார் கடக்க முயன்றது. அப்போது அந்த ரயில் பாதையில் காரைக்குடியிலிருந்துபுதுக்கோட்டை நோக்கி ஒரு ரயில் என்ஜின் வந்து கொண்டிருந்தது.

வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் என்ஜின் ரயில்வே கிராசிங்கைக் கடந்து கொண்டிருந்த கார் மீதுஎதிர்பாராதவிதமாகத் திடீரென்று பயங்கரமாக மோதியது.

இதனால் அந்தக் கார் தூக்கி வீசப்பட்டு நொறுங்கி விழுந்தது. இதில் காரிலிருந்த மூன்று பேரும் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+