தலித்துகளுக்கு பாதுகாப்பு கோருகிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வன்கொடுமைச் சட்டத்தை தமிழகஅரசு சரியாகப் பயன்படுத்தவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தைத் தமிழக அரசு சரியாகவும்முறையாகவும் பயன்படுத்தவில்லை.

அந்தச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளை அரசு கட்டுப்படுத்தவேண்டும்.

தற்போது வெளியாகும் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளைத் தடுக்க சென்சார் போர்டு தொடர்ந்து தவறிவருகிறது. இதனால் தான் சமூகத்தில் தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நெசவாளர்கள் பசி, பட்டினியால் வாடிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு புறம் கஞ்சித் தொட்டியும், மறுபுறம்ஏட்டிக்குப் போட்டியாக பிரியாணியும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படிப் போட்டி போட்டு வழங்குவதை விட அரசே, நெசவாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையானஅரிசி மற்றும் பொருட்களை இவலசமாக வழங்க வேண்டும்.

பட்டினியால் வாடிக் கொண்டுள்ள நெசவாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், நிவாரண உதவியும் அளிக்கவேண்டும். அது தான் சரியான உதவியாக இருக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியுடன், தமாகா இணைந்து விட்டதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.கோஷ்டிகளின் எண்ணிக்கை தான் அங்கு அதிகரிக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+