டெல்லி சென்றார் ஜெ.: கலாமை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலைடெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரானபைரோன் சிங் ஷெகாவத் கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவுக்கு டெலிபோன் மூலம் இதற்கான அழைப்பைவிடுத்தார்.
ஜெயலலிதாவும் அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை ஜெயலலிதா விமானம் மூலம் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.
அங்கு துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா பின்னர் ஜனாதிபதி டாக்டர்ஏ.பி.ஜே. அப்துல் கலாமையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அதன் பிறகு ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications