போலீசாரின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக போலீசாரிடம் குறைகளைக் கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றுவதற்காக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 14 வரை ஐந்து கட்டமாக சுமார் 8,150 தமிழகப் போலீசார்,சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் நேரில் குறைகள் கேட்டார் ஜெயலலிதா.அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் அவர்.
பணி இடமாற்றம் முதல் மருத்துவ உதவி வரை பல்வேறு கோரிக்கைகளை ஜெயலலிதாவிடம் போலீசார்தெரிவித்தனர். நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர்களிடம்ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்படி பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான போலீசாரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படிஇன்று அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பணியின் போது மரணமடைந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரின்வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தகுதியுள்ள போலீசாருக்கு இடமாற்றத்திற்கான உத்தரவும் உடனடியாக செயல்படுத்தப்படும்.
சீருடைப் பணியாளர்களின் வேலை மிகவும் சிரமமானது என்பதால் மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அவர்கள் மேலும் புத்துணர்ச்சியுடன் சிறந்த முறையில்பணியாற்றுவார்கள்.
ஏராளமான பெண் போலீசார் வேலையைப் பார்த்துக் கொண்டு தங்களுடைய கைக்குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே பெண் போலீசாரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக நன்கு பயிற்சி பெற்ற ஆயாக்களைக்கொண்ட குழந்தை காப்பகங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications