துணை ஜனாதிபதியாக ஷெகாவத் பதவியேற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
டெல்லி:
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக 79 வயதான பைரோன் சிங் ஷெகாவத் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் ஷெகாவத்துக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
ஷெகாவத் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால்,நரசிம்ம ராவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மற்றும் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான ஷெகாவத் தான் துணை ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் பா.ஜ.க. தலைவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications