12 ஏர்வாடி மன நோயாளிகள் சென்னை மருத்துவமனையில் சேர்ப்பு
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பகுதியில் விடப்பட்டிருந்த மன நோயாளிகளில் 12 பேர் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏர்வாடி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கர தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட மன நோயாளிகள்உடல் கருகி இறந்தனர். இதைத் தொடர்ந்து ஏர்வாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாமல் மனநோயாளிகள் காப்பகம் நடத்த அரசு தடை விதித்தது.
இந் நிலையில் மீண்டும் அப்பகுதியில் மன நோயாளிகள் நடமாட்டம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து போலீஸார்ஏர்வாடி பகுதியில் சோதனை நடத்தி 17 மன நோயாளிகளைப் பிடித்தனர்.
அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் 12 பேர்சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொணடு வரப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் மன நோயாளிகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.












Click it and Unblock the Notifications