விரைவில் தாமரைக்கனி கைதாகலாம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைத் தரக் குறைவாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தாமரைக்கனிக்கு முன் ஜாமீன் அளிக்க சென்னைஉயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய தாமரைக்கனி, முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாகவிமர்சித்தார். பெற்ற தாயை மதிக்க மறுக்கிறார்கள். ஆனால், யாரையோ அம்மா என்று அழைக்கிறார்கள். அவர் என்ன உன்னைப் பெற்றதாயா? பாலூட்டி வளர்த்தாரா என்ற ரீதியில் பேசியிருந்தார் தாமரைக்கனி.
இதையடுத்து அவதூறாகப் பேசியதாக தாமரைக்கனி மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்தன்னை போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதால் தனக்கு முன் ஜாமீன் தருமாறு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாமரைக்கனி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் இன்று அளித்த தீர்ப்பில் தாமரைக்கனிக்கு முன் ஜாமீன் தர மறுத்துவிட்டார்.
இதனால் தாமரைக்கனி மிக விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்துவிட்டதாமரைக்கனி சமீபகாலமாக ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications