கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொலை: கடலூரில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து ஆயுதப் படை போலீஸார் அங்கு ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பாக்கம். இது ஒரு கடலோர கிராமம் ஆகும்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சந்திரன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் தலைவர்வீராசாமியின் தலைமையில் ஒரு கோஷ்டியும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இவர்களுக்குள் அடிக்கடிதகராறுகள், மோதல்கள் நடக்கும். இதனால் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்திரன் சரியாக செயல்படுவதில்லை என்று கூறி வீராசாமியின் தரப்பினர் ஊருக்குள்பிரச்சினையைக் கிளப்பினர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமீபத்தில் கடும் மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் கத்தி, அரிவாள், ஈட்டி, வேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 2 பேர்வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மோதல் பெரிய அளவில் மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆயுதப்படை போலீஸார்அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர்.

அமைதிக் குழுவை ஏற்படுத்த போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர். அங்கு பலத்த பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+