ஜெ.க்கு எதிரான டான்சி வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 27ம் தேதிக்குஒத்திவைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (20ம் தேதி) இந்த விசாரணை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அன்று நேரமின்மைகாரணமாக இவ்வழக்கு புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக அதிமுக வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பியுமான என். ஜோதியும், திமுக வழக்கறிஞரும் ராஜ்யசபாஎம்.பியுமான சண்முகசுந்தரமும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால் புதன்கிழமை நடைபெற வேண்டிய வழக்குகளின் பட்டியலிலும் டான்சி வழக்கு இடம்பெறவில்லை.இதையடுத்து புதன்கிழமையும் நேரமின்மை காரணமாக இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி பி. வெங்கடராம ரெட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வரும்27ம் தேதி கூடுகிறது. அப்போது தான் டான்சி வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அதே 27ம் தேதி தான் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டம்நடைபெறுகிறது என்பதும் ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications