For Daily Alerts
Just In
திருச்சியில் என்ஜின் தடம்புரண்டது: பல ரயில்கள் தாமதம்
திருச்சி:
திருச்சி ரயில் நிலையத்தில் மங்களூர் ரயிலின் என்ஜின் தடம் புரண்டதால் பல ரயில்களின் புறப்பாடு தாமதமானது.
திருச்சி-மங்களூர் ரயில் இன்று காலை 6 மணிக்குப் புறப்பட இருந்தது. ரயில்வே யார்ட் பகுதியில்நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலின் பெட்டிகளை நிலையத்துக்குக் கொண்டு வருவதற்காக ஒரு என்ஜின் புறப்பட்டுச்சென்றது.
ஆனால், யார்டுக்கு செல்லும் வழியில் ரயில் நிலையத்திலேயே அந்த என்ஜின் தடம் புரண்டுவிட்டது.
இதனால் திருச்சி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி-விழுப்புரம், திருச்சி-ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியரயில்களும் நிறுத்தப்பட்டன.
தடம்புரண்ட என்ஜினை மீட்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் துரிதகதியில் மேற்கொண்டனர். ஒரு மணிநேரத்தில் என்ஜின் மீட்கப்பட்டது.
இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக எல்லா ரயில்களும் புறப்பட்டுச் சென்றன.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]