பஞ்சாயத்து தலைவரின் "தலையை" தேடும் போலீஸ்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு அருகே சில நாட்களுக்கு முன் செட்டிக்குறிச்சி பஞ்சாயத்தின் தலைவர் சங்கரலட்சுமணன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனால், அவரது தலையை கொலையாளிகள் தனியே வெட்டி எடுத்துச்சென்றுவிட்டனர்.
அவரது தலை கிடைக்காத வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறிவிட்டதால் தலையைத் தேடிபோலீஸார் தீவிர வேட்டையாடி வருகின்றனர்.
சங்கர லட்சுமணனுடன் அவரது தம்பி முத்துக் கிருஷ்ணனையும் அந்தக் கும்பல் வெட்டிக் கொன்றது. ஆனால்,அவரது தலையை உடலிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
தலையிலலா முண்டமாகக் கிடந்த சங்கர லட்சுமணனின் உடல் இப்போது அரசு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் 3 பேர்தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications