கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அபாயகரமான கசிவு
கல்பாக்கம்:
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அபாயம் மிக்க கதிர்வீச்சு (Radiation) கசிந்துள்ளது.
இதில் அங்கு பணிபுரிந்த தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஊழியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும்காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரியும் சில ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கல்பாக்கத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் சில வாரங்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், மிக ரகசியமான ஆராய்ச்சிமையம் என்பதால் இந்த விவரம் மறைக்கப்பட்டுவிட்டது.
இந்த கதிர்வீச்சு கசிவு தொடர்பாக தேசிய அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக நடந்த இந்த விசாரணையில் அங்கு கதிர்வீச்சு கசிந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவம் விபத்து இல்லை என்றும் ஊழியரின் தவறால் (Human error) தான் ஏற்பட்டதாகவும் மற்றபடி அணு உலைபாதுகாப்பாகவே உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பெயர் விவரத்தை அணு மின் நிலையம் வெளியிடவில்லை. மேலும் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குதரப்பட்ட சிகிச்சையின் விவரமும் தெரியவில்லை.
முழு அளவில் ரகசியம் பாதுகாக்கப்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கு மேல் விவரங்களைப் பெற முடியவில்லை.