ஸ்டாலின் ஆதரவாளர் மீது கருணாநிதி கோபம்
சென்னை:
அழகிரியைக் கடுமையாக எதிர்த்து வரும் மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரன் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அழகிரியின் தொல்லைகளுக்கு எதிராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரனும்எதிர்ப்புக் குரல் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்.
செ.ராமச்சந்திரன் தேனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் பதவியை ஸ்டாலினிடம்ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.
ராமச்சந்திரனின் இந்தப் பேட்டி கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருணாநிதி கூறுகையில்,செ.ராமச்சந்திரன் தனது எல்லையை மீறி பேசியுள்ளார். ஸ்டாலினைப் பற்றிப் பேச இவர் யார்?. இதுபோன்றவிஷயங்களை தனி நபர் பேசுவதற்கு திமுக விதிமுறைகள் அனுமதிக்காது.
கொஞ்ச நாளாகவே இவரது நடவடிக்கைகள் சரியில்லை. என்னைக் கேட்காமல், ஜெயலலிதாவைப் பார்த்தார்.பார்த்த பின்பு மரியாதைக்குக் கூட என்னை வந்து பார்க்கவில்லை.
முன்பு இவர் மதிமுகவுக்குப் போய்விட்டு திமுகவுக்கு திரும்பி வந்தார். மதிமுகவில் இருந்தபோது எனதுகொடும்பாவியை எரித்தவர் தான் இந்த ராமச்சந்திரன் என்பதை நான் மறக்கவில்லை.
ஸ்டாலின் குறித்துப் பேசியதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேலாவது ஒழுங்காக நடந்துகொள்வேன் என்று உறுதி கூற வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கருணாநிதி.
மூத்த தலைவர் பழனிவேல்ராஜனை நேரடியாகத் திட்ட முடியாது என்பதால் ராமச்சந்திரனை கருணாநிதிகடுமையாகக் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
அதே சமயம் கருணாநிதியின் இந்தப் பேச்சு திமுகவினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டாலினைத்தான் கருணாநிதி ஆதரித்து வருகிறார் என்று நினைத்திருந்த திமுகவினர் மத்தியில் நலவும்போது,ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான செ.ராமச்சந்திரன் மீது கருணாநிதி கடுமையாக பாய்ந்திருப்பதுஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதி மாறி விட்டாரோ என்ற குழப்பம் திமுகவினர் மத்தியில்எழுந்துள்ளது. அப்படி இருந்தால் அது கட்சிக்கு நல்லதல்ல என்றே பெரும்பான்மை திமுகவினர் கருதுகின்றனர்.