ஏட்டிக்கு போட்டி போஸ்டர்கள்
மதுரை:
அழகிரி விவகாரம் தொடர்பாக இனி திமுக தலைமையுடன் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுன்னாள் சபாநாயகரும் மூத்த திமுக தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறினார்.
லண்டன் பி.பி.சி. தமிழோசைக்கு நேற்று (வியாழக்கிழமை) அவர் அளித்த பேட்டி விவரம்:
எல்லாக் கட்சிகளிலும் உள்கட்சிப் பூசல், பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இங்கே உள்ளபிரச்சனையோ மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
இனி திமுக தலைமையுடன் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. யாருடன் இது தொடர்பாக நான் பேசவும்முயற்சிக்கவில்லை.
இனி ஒன்றுமே இல்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் அவர்களிடம் போய் என்னத்த பேசுறது என்றார்பி.டி.ஆர்.
திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தீர்களா என்று பி.பி.சி. செய்தியாளர் கேட்டதற்கு, "அவர் கிட்ட போகமுடியுமா? சாதாரணமா நெருங்கக் கூடிய தூரத்திலா அவர் இருக்கிறார்?" என்று பி.டி.ஆர். பதிலளித்தார்.
இதற்கிடையே போஸ்டர்களுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரத்தில் திமுக கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தும்போஸ்டர்களும் நூற்றுக்கணக்கில் ஒட்டப்பட்டுள்ளன.
"அழகிரியே அடங்கு", "கோழி சாப்ஸ் அழகிரியே..." என்று ஸ்டாலின் தரப்பினரும் "பி.டி.ஆரே வெளியே போ", "நீஎல்லாம் மூத்த தலைவனா?..." என்று அழகிரி தரப்பினரும் மாற்றி மாற்றி பல்வேறு கொச்சை வசனங்கள் அடங்கியபல வண்ண போஸ்டர்களை அச்சடித்து மதுரை சுவர்கள் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
திமுகவினரின் இந்தக் கோஷ்டிப் பூசல் போஸ்டர்களால் மதுரை சுவர்களும், பஸ்களும் நாறத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications