சென்னை: "ஓசி பஸ் கிராக்கி"களிடம் ரூ.3 லட்சம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களின் தீவிர பரிசோதனையின்விளைவாக 2,000க்கும் மேற்பட்ட ஓசி பயணிகள் பிடிபட்டனர்.
இந்த ஓசிப் பயணிகளிடமிருந்து ரூ.3 லட்சத்து 603 அபராதம் வசூலிக்கப்பட்டது.
அவ்வப்போது இந்தப் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications