தேர்தல் கமிஷ்னர் மீது மதரீதியில் விமர்சனம்: பா.ஜ.கவுக்கு கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைத்த தலைமை தேர்தல் கமிஷ்னர் லிங்டோவின் மதத்தைக் குறிப்பிட்டு அம் மாநில பா.ஜ.க. பேசியிருப்பதுகடுமையாகக் கண்டிக்கத்தத்து என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
குஜராத்தில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை என்று கூறி அங்கு தேர்தல் நடத்த கமிஷன் மறுத்துவிட்டது.
அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. இதன்மூலம் மதக் கலவரத்தில் பெரும்விமர்சனத்துக்கு உள்ளான முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான தங்களது ஆட்சியிலேயே தேர்தலை சந்தித்துவிடலாம் என்றபா.ஜ.கவின் திட்டத்தை தேர்தல் கமிஷன் தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையரை மோடி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு கிருஸ்தவர் என்பதால் தான்இந்துவான எனக்கு எதிரான முடிவை எடுத்துள்ளார் என்று முதல்வர் என்ற பொறுப்பு இல்லாமல் மோடி பேசியுள்ளார்.
ஆனால், நேற்று ஸ்டார் டிவிக்குப் பேட்டியளித்த லிங்டோ, எனக்கு மதமே கிடையாது. நான் ஒரு இந்தியன் என்று பதிலளித்தார்.
இந் நிலையில் மோடியின் பேச்சுக்கு கருணாநிதியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர், அரசியல் சட்டத்தின்கீழ் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரை இவ்வாறு அவரது மதத்தைக் குறிப்பிட்டு விமர்சிப்பது மிகத் தவறானது என்றார் கருணாநிதி.