மதுரை பயங்கர திருவிழா: விசாரணை ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து மதுரையில் நடந்த அதிபயங்கர திருவிழா குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனின்உத்தரவுப்படி விசாரணை ஆரம்பித்துள்ளது. மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கரத் திருவிழா குறித்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும் என்றுவேண்டியும் குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்கிறார்கள்.

இதன்படி இந்தக் கோவில் விழாவின்போது வயதுக்கு வராத சிறுமிகளை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து சில நிமிடங்கள் கழித்துஅவர்களை புதைகுழியில் இருந்து மீட்கின்றனர். இந்த விழா கடந்த புதன்கிழமை நடந்தது.

அதிபயங்கரமான இந்த நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விழாவில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவை 1996ம் ஆண்டிலேயே தேசிய மனித உரிமைக் கமிஷன் தடை செய்திருப்பதும் அதையும் மீறி இந்த விழாநடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்குமாறு மாநில அரசுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+