13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் மறுபடியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைமொத்தம் 13 அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த அதிகாரிகளான அருண் ராமநாதன், மாதவன் நம்பியார், ஜோதி ஜெகராஜன் ஆகியோர் இவர்களில்முக்கியமானவர்கள்.
இவர்களில் அருண் ராமநாதன், கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
"டிட்கோ"வின் நிர்வாக இயக்குநராக அருண் ராமநாதனும், கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை செயலாளராகமாதவன் நம்பியாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜோதி ஜெகராஜன் உள்துறை துணைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் அலுவலக தனி அதிகாரியாக இருந்து வந்த பீலா ராஜேஷ், சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகமாற்றப்பட்டுள்ளார். இவரது கணவர் தான் சமீபத்தில் பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக வந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பீலா ராஜேஷுக்குப் பதில் வீரசண்முகமணி முதல்வர் அலுவலகத்தின் புதிய தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர மொத்தம் 13 பேர் இடமாற்றம் மற்றும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.