பெங்களூரில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.
இது குறித்து நகர காவல்துறை ஆணையர் சங்லியானா நிருபர்களிடம் கூறுகையில்,
எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் முழுவதும் 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் இன்று பகல் 2 மணி முதல் இந்த தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வார காலம் அமலில் இருக்கும்.
இந்தப் பகுதிகளில் ரோந்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சங்லியானா.












Click it and Unblock the Notifications