Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை காவிரி கூட்டம்: ஜெ. இன்று டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் நாளை டெல்லியில்காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடக்கிறது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவும் கலந்து கொள்கினறனர்.

இதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) மாலை டெல்லி செல்கிறார். பொதுப்பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை, விவசாயத்துறை செயலாளர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவும் உடன்செல்கிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பிரதமர் வாஜ்பாய் இந்த ஆணையக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதையொட்டிநேற்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்றுஅறிவிக்கப்பட்டது.

கர்நாடகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பிரச்சனை கிளப்ப முதல்வர்ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். இந் நிலையில் வீரப்பன் தனது கடத்தை நடத்தியுள்ளான்.

ஜெ.- கிருஷ்ணா ஆலோசிப்பர்:

இந்தக் கடத்தல் விவகாரம் குறித்தும் நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து மீட்பது குறித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

இது குறித்து பிரதமரிடமும் இரு மாநில முதல்வர்களும் பேச உள்ளனர்.

ஜெயலலிதா டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருப்பார். அவர் புதன்கிழமை சென்னை திரும்புவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+