வீட்டுக்குள் பிணமாக கிடந்த டாக்டர் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் டாக்டர் ஒருவரின் பூட்டிய வீட்டுக்குள் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அரைகுறையாக எரிக்கப்பட்டு பிணமாகக்கிடந்தனர்.

இவர்கள் விஷ ஊசி போடப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் வீட்டுக்குள்ளேயே எரிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அந்தப் பகுதியில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தாசில்தார் நகர் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ரங்கநாதன். இவர் விரகனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப்பணியாற்றி வருகிறார். இன்று காலை இவரது வீட்டிலிருந்து துர் நாற்றத்துடன் புகை வந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்போலீசாருக்குத் தகவல் தந்தனர்.

போலீசார் வந்து வீட்டை உடைத்துப் பார்த்தபோது 5 பிணங்கள் கிடந்தன. டாக்டரின் மனைவி உஷாராணி, தாயார் கிருஷ்வேணி, மகன்மாதவன், மகள் பிருந்தா, அக்காள் மகன் ஸ்ரீராம் ஆகியோர் பிணமாகக் கிடந்தனர்.

அவர்களின் உடல்ளுக்கு அருகிலும் குப்பைத் தொட்டியிலும் காலியான சிரிஞ்சுகளும் கிடந்தன. அவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் இல்லாததால் அவர்கள் விஷ ஊசி போடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. உடல்களும்அரைகுறையாக எரிக்கப்பட்டுள்ளன.

இதில் டாக்டர் ரங்கராஜனின் உடல் இல்லை. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

அந்த வீட்டின் வாசலில் கையால் எழுத்தப்பட்ட இரண்டு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், இவர்களை கந்து வட்டிக் கும்பல்கொலை செய்துள்ளதாகவும், டாக்டர் ரங்கராஜனையும் கொலை செய்து உடலை கண்டந்துண்டமாக வெட்டி கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நோட்டீஸ் போலீஸை திசை திருப்பவதற்காக டாக்டர் ரங்கராஜனாலேயே எழுதப்பட்டிருக்கலாம் என போலீசார்சந்தேகிக்கின்றனர். டாக்டர் ரங்கநாதன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தக் குடும்பத்தினர் மதுரையில் கந்து வட்டிக் கும்பலிடம் பணம் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இக் குடும்பத்தை வட்டிக் கும்பல்கள் மிரட்டி வந்ததாகவும் இதையடுத்து டாக்டர் ரங்கராஜனேதனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு ஊரைவிட்டு ஓடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகினறனர்.

அவரும் கூட தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதால் அவரைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் வட்டிக்குப் பணம் தந்து வரும் கும்பல்களால் பல குடும்பங்கள சீரழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வட்டி கட்டி முடியாதகுடும்பங்களின் பெண்களையும் கூட இந்தக் கும்பல்கள் நடுரோட்டில் வைத்து கையைப் பிடித்து இழுப்பது, மான பங்கம் செய்ய முயல்வதுபோன்ற கேவலமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கந்து வட்டித்தொழிலில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின்அடாவடிக்கு போலீகாரர்களும் துணையாக இருப்பதாலும், பல நேரங்களில் போலீஸ்காரர்களே பினாமியாக இருந்து இந்த கந்து வட்டித்தொழிலை நடத்துவதாலும் பல குடும்பங்களை தெருவுக்கு வந்துவிட்டன.

பல தொழில் நிறுவனங்களைக் கூட மூடச் செய்துவிட்டன இந்த கும்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+