பறை இசை கலைஞர்களின் கின்னஸ் முயற்சி
சென்னை:
தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்றான பறை இசைக்கு புத்துயிரூட்டும் முயற்சிகள் தமிழகத்தில்தொடங்கியுள்ளன.
சங்க காலத்திலும்,தொல்காப்பியத்திலும் இடம் பெற்றிருந்த உன்னதமான இசை பறை இசை. போர்க் காலங்களில்போர் துவங்குவதற்கு முன் இந்த பறை இசைதான் திடந்தோள் வீரர்களைத் தட்டி எழுப்பி போர்க் களத்திற்கு இட்டுச்செல்லும்.
காலப் போக்கில் பறை இசை அருகி விட்டது. இதை மீண்டும் புதுப்பிக்கவும், புத்துயிர் ஊட்டவும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பறை இசையின் பயன்பாடு சுருங்கிவிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசியவர்கள், அருமையான ஒரு இசையானது, உயர் ஜாதியினரின் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்டவர்களின் இசைக் கருவி என்றஅளவுக்கு சுருங்கி விட்டது மிகவும் வேதனைக்குரியது. இது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக் கருவியல்ல,தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்று.
சாவு நிகழ்ச்சிகளில் மட்டுமே இப்போது பறை இசை அடிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். முன்பு 38வகை இசை தமிழர்கள் மத்தியில் நிலவி வந்தது.
பறை இசையின் பெருமையை உலகம் உணரும் வகையில் விரைவில் சென்னை மெரீனா கடற்கரையில் தொடர்ந்துபறை இசையை முழக்கி கின்னஸ் சாதனை படைக்க தமிழ்நாடு பறை இசை கலைஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதுஎன்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications