கர்நாடக அதிகாரிகள் பேச மறுக்கிறார்கள்: தமிழக டி.ஜி.பி. புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகப்பா கடத்தல் விவகாரம் குறித்து கர்நாடக காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று தமிழக காவல்துறைடி.ஜி.பி. நெயில்வால் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இரவு முதல் தொடர்ந்து முயற்சி செய்தும் கர்நாடக அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமானபதிலும் கிடைக்கவில்லை என்றார்.

தமிழக- கர்நாடக அதிரடிப்படையினர் இடையே சுமூக உறவு இல்லை, நாகப்பா கடத்தல் தொடர்பாக இதுவரை கர்நாடக அமைச்சர்என்னுடன் பேசவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழக டி.ஜி.பியும் அதே போன்ற குற்றச்சாட்டைக்கூறியுள்ளதால் இரு மாநிலங்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருவது உறுதியாகிறது.

இது குறித்து நெயில்வால் நிருபர்களிடம் கூறுகையில், நாகப்பாவின் கடத்தல் விவகாரம் சிறப்பு அதிரடிப் படைக்கு ஏற்பட்ட பெரும்பின்னடைவு தான். வீரப்பனின் மறைந்திருக்க வாய்ப்புள்ள இடங்களில் தேடுதல் வேட்டை தொடங்கிவிட்டது.

இது குறித்து நேரில் தெரிந்து கொள்ள நானே இன்று ாலை சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்கிறேன். இந்தக் கடத்தல் நடந்தது முதல் நேற்றுநள்ளிரவில் இருந்து நானும் தொடர்ந்து கர்நாடக காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.ஆனால், அவர்கள் யாரும் எங்களுடன் பேசவே தயாராக இல்லை என்றார் நெயில்வால்.

முன்னதாக கோட்டைக்கு வந்த நெயில்வால் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து காட்டுப் பகுதி நிலைமை குறித்து விவாதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+