கல்லூரிக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
தஞ்சை பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அந்தக் கல்லூரியில் இன்று காலை 6 மணியளவில் மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேவந்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் தொங்கியது.
அவர் தானாகவே தூக்கில் தொங்கினாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டாரா என்று தெரியவில்லை.
மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் அதிலும் கல்லூரி வளாகத்துக்குள் இச் சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications