சதுர்த்திக்கு "பாபா" விநாயகர் ரெடி!
சென்னை:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதம் விதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில்அவற்றில் ஒன்றாக "பாபா"வும் இடம் பிடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விதம் விதமானவிநாயகர் சிலைகள் வணங்கப்பட்டு பின்னர் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆறு மற்றும் கடலில்கரைக்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான விநாயகர்கள் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். முன்பு இந்தியாஅணுகுண்டு சோதனை நடத்தியபோதும், கார்கில் போரின்போதும் அதன் நினைவாக பிள்ளையார் சிலைகள்செய்யப்பட்டன. அதேபோல இப்போதும் ஒரு வித்தியாசமான விநாயகர் அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் "பாபா" படத்தில் வரும் இரண்டு விரல் அடையாளத்தை வைத்து "பாபா" விநாயகர் என்றபெயரில் புதுவிதமான விநாயகர் செய்யப்பட்டு வருகிறார். தன்னுடைய இடது கையை "பாபா" முத்திரை போலஇந்த விநாயகர் காட்டுவது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.
ரஜினி ரசிகர்கள் இந்த "பாபா" விநாயகருக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், இதைத் தெருக்களில்வைத்து அவர்கள் வணங்கப் போவதாகவும் சிலைகள் செய்பவர்கள் கூறுகிறார்கள்.
ரசிகர்களுக்கும் "பாபா" முத்திரையுடன் விநாயகர் இருப்பது பக்தியைக் கொடுக்கிறது. ஆனால் பக்தியிலும், சினிமாகலந்து விட்டதை எண்ணி வருத்தப்படுகிறார்கள் நடுநிலை பொது ஜனங்கள்.












Click it and Unblock the Notifications