புதுக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் கைதி மர்ம சாவு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துவிட்டதாகப் போலீசார் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

புதுக்கோட்டை அருகே நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரும் அவருடைய மகன் ஐயப்பனும் தன்மகளைக் கடத்தியதாக அழகப்பன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து மணியையும் ஐயப்பனையும் நமணசமுத்திரம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை போலீஸ் நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துவிட்டதாகப் போலீசார் கூறினர்.

ஆனால் இதை நம்பாத மணியின் உறவினர்களும் பொதுமக்களும் அந்தப் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் தான் மணியை அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் சமீப காலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விசாரணைக் கைதி ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில்மர்மமான முறையில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+