மீண்டும் கர்நாடக அதிரடிப்படையில் கெம்பையா?
பெங்களூர்:
கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக மீண்டும் ஐ.ஜி. கெம்பையாவை நியமிக்க கர்நாடகம் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திய சம்பவத்திற்கு அதிரடிப்படை தலைவராக இருந்தகெம்பையா மாற்றப்பட்டது தான் காரணம் என்று அம்மாநில அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இதைக் கடுமையாக மறுத்து விட்டார்.
கெம்பையாவை அதிரடிப்படையிலிருந்து மாற்றிய காரணம் குறித்தும் இதுவரை தகவல் இல்லை. மேலும் அவரைமீண்டும் அதிரடிப்படைக்குத் தலைவராக நியமிப்பது குறித்தும் இதுவரை கர்நாடக அரசு எந்தவிதமான ஒருமுடிவும் எடுக்கவில்லை. ஆனால், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இப்போது கெம்பையா காட்டுப் பகுதியில் தான் இருக்கிறார். கர்நாடக அதிரடிப் படையின் இப்போதைய தலைவர்சர்மாவுக்கு உதவுவதற்காக நேற்று அவர் சாம்ராஜ்நகர் சென்றார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
நாகப்பாவின் வீட்டிற்கு நேற்று சென்ற அமைச்சர்கள் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டுத்திரும்பிய போது, கொள்ளேகால் பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு "கெரோ" செய்தனர்.
கெம்பையா அல்லது மற்றொரு முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பிதாரி ஆகியோரில் யாராவது ஒருவரைமீண்டும் அந்தப் படைக்குக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அப்போது கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று கார்கே அவர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications