மத மாற்றம்: கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
செகோயம்புத்தூர்:
ஏராளமான தாழ்த்தப்பட்ட வகுப்பு (தலித்) ஹிந்து இளைஞர்களை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று பணத்தாசைகாட்டி தங்கள் மதத்திற்கு மாற்றுவதை எதிர்த்து பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த கைதிகள் இன்றுகோயம்புத்தூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மத மாற்றம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த உத்தரவிடும் வரை நாங்கள் உணவைத் தொடப்போவதில்லை என்றும் சுமார் 240 ஹிந்து கைதிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
செவன்த் டே அட்வன்டிஸ்ட் பள்ளியில் கடந்த 24ம் தேதி கூட சிவகங்கை, திருநெல்வேலி, மானாமதுரை,திண்டுக்கல், அம்மாபட்டி மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுமார் 250 தலித் கிராமத்தினர் கிறிஸ்தவ மதத்தைத்தழுவியுள்ளனர்.
மதம் மாறினால் நிறையப் பணம் தருவோம் என்று செவன்த் டே அட்வன்டிஸ்ட் சர்ச் நிர்வாகம் அவர்களிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி அவர்களை மதம் மாறச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு இந்த சர்ச் நிர்வாகம் 1,500க்கும் மேற்பட்ட தலித் ஹிந்துக்களை முதல் முறையாக மதம் மாறச்செய்தது.
சமீபத்தில் கூட ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்குமாறியுள்ளதாக செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் நிர்வாகத்தின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications