நெல்லையில் பலத்த மழை: இடி தாக்கி சிறுவன் பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பெய்த கன மழையின் போது இடி தாக்கி ஒரு சிறுவன், 2பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய பகுதிகளில்நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கன மழை பெய்தது.
சாத்தூரில் பலத்த இடிச் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கரம்பை மற்றும் நடவுக் குறிச்சி ஆகிய கிராமங்களில் பெய்த கன மழையில் கிராமத்தில்உள்ள அத்தனை வீடுகளும் தண்ணீரில் மூழ்கி விட்டன.
கரம்பையில் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 பெண்கள் இடி தாக்கி பலியாயினர்.அவர்களுடன் இருந்த 16 ஆடுகளும் கருகின.
நடவுக்குறிச்சியில் பூசைப்பாண்டி என்ற விவசாயி பரிதாபமாக பலியானார். வயலில் தக்காளி பறித்துக்கொண்டிருந்தபோது இவர் இடி தாக்கி இறந்தார்.












Click it and Unblock the Notifications