கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய கப்பல்போக்குவரத்துறை இணையமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
பெங்களூர் வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பனின் ஆள் கடத்தைத் தடுக்க வேண்டும். இரு மாநிலங்களும் இணைந்து அவனை ஒடுக்க முயற்சிக்க வேண்டும். ஜெயலலிதாவும்கர்நாடக முதல்வரும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் முதலில் களைய வேண்டும்.
நாகப்பா கடத்தால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக சில தாக்குதல்கள் நடந்துள்ளன. இது மேலும் தொடராவண்ணம்தடுக்க வேண்டும். அந்த மாவட்டத் தமிழர்களுக்கு கர்நாடக அரசு பாதுகாப்புத் தர வேண்டும் என்றார் திருநாவுக்கரசு.












Click it and Unblock the Notifications