வீரப்பனை பிடிக்க ராணுவம் அவசியம்: தேவாரம்
மைசூர்:
மத்திய அரசின் உதவியில்லாமல், இந்திய ராணுவத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சந்தன வீரப்பனைப் பிடிக்கமுடியாது என்று கூட்டு அதிரடிப்படையின் தலைவர் வால்டர் தேவாரம் கூறினார்.
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட போதே தேவாரம் இந்த யோசனையைத் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளிடம்கூறியிருந்தார்.
தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரின் முக்கிய நோக்கமே வீரப்பனைப் பிடிப்பது என்பது தான். ஆனால்காட்டில் ஒளிந்து வாழும் அவனைப் பிடிக்க திறமையான பயிற்சி மட்டும் போதாது. காட்டுப் பகுதியை ஒட்டியுள்ளகிராம மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
ஆனால் அதிரடிப்படையினருக்கு இப்பணி சாதகமாக அமையவில்லை. எனவே இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை என்று அழைக்கப்படும் கறுப்புப்பூனைப் படை ஆகியவற்றைக் கொண்ட விசேஷ அதிரடிப் படையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
காட்டுப் பகுதியின் வரைபடத்தை வைத்துக் கொண்டு சிறு சிறு குழுக்களாக இந்திய ராணுவத்தினர் பிரிந்து காடுமுழுவதும் சென்று தேடுதல் வேட்டை நடத்தினால் வீரப்பனை சுலபமாகப் பிடித்து விடலாம் என்றும் அதிகாரிகள்கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் வீரப்பனைப் பிடிப்பது வரை எக்காரணத்தைக் கொண்டும் ராணுவத்தை மத்திய அரசு வாபஸ்பெறக் கூடாது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் கர்நாடகா கோரிக்கை:
இதற்கிடையே வீரப்பனைப் பிடிப்பதற்காக பாரா மிலிட்டரியைச் சேர்ந்த 4 பட்டாலியன் படைப் பிரிவுகளையும்கமாண்டோக்களையும் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கே இன்று கூறினார்.
மேலும் வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான பல நவீன சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்க வேண்டும்என்றும் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே கடந்த 1993ல் கர்நாடக, தமிழக அரசுகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு எல்லைப்பாதுகாப்புப் படையை அனுப்பி வைத்தது என்பதும் ஆனால் அவர்கள் வீரப்பனைப் பிடிக்க முடியாமல்திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications