களை கட்டும் சத்தியமூர்த்தி பவன்
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவன் மீண்டும் உற்சாகத்திற்கு மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் தொண்டர்கள்தலையையே காண முடிகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருந்து வந்தது சத்தியமூர்த்தி பவன். தமிழகத்தில் வேறுஎந்த அரசியல் கட்சிக்கும் பிரமாண்டமான சொந்த அலுலவகம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமேசத்தியமூர்த்தி பவன் என்ற மிகப் பெரிய கட்டடத்தின் கீழ் தனது கட்சியை நடத்தி வந்தது.
மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது, சத்தியமூர்த்தி பவனை அவர் கைப்பற்றிக்கொண்டார். இதையடுத்து வாடகைக் கட்டடத்திற்கு காங்கிரஸ் இடம் பெயர்ந்தது.
இந்த சூழ்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைந்து விட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின்தலைமை அலுவலகமும் சத்தியமூர்த்தி பவனுக்கு மாறுகிறது.
இரு கட்சிகளும் இணைந்த பிறகு முதல் முறையாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று(புதன்கிழமை) நடந்தது. அதில் அகில இந்திய செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, ஜி.கே. வாசன், இளங்கோவன்உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அத்தனைத் தலைவர்களையும் ஒரே அணியாகப் பார்த்து நாளாயிற்றே என்ற எண்ணத்திலோ என்னவோ, பவன்முழுவதும் தொண்டர்கள் தலை தான் காணப்பட்டது.
திருவிழாக் கூட்டம் போல காணப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்த பொதுமக்களுக்கு ஆச்சரியமோஆச்சரியம். காங்கிரஸுக்கு உண்மையிலேயே பலம் வந்து விட்டதோ என்ற எண்ணம் மக்களிடையே உருவானது.
இன்று மட்டுமல்ல, இரு கட்சிகளும் இணையப் போகின்றன என்ற பேச்சு எழுந்த நாள் முதலே சத்தியமூர்த்திபவனில் தொண்டர்கள் கூட்டம் களை கட்டத் தொடங்கி விட்டது.
இந்த ஒற்றுமையை, ஆர்வத்தை அத்தனை விஷயத்திலும் முனைப்புடன் காண்பித்தால் காமராஜர் ஆட்சி குறித்தகனவு நனவாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications