உசிலம்பட்டி அருகே 23 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே கல் குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்த 13 சிறுவர்கள் உள்பட 23பேர் மீட்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 23 பேரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.
அவர்களுக்கு கல் குவாரி முதலாளிகள் சரியாகவே சம்பளம் கொடுப்பதில்லையாம். ஆனால் நன்றாக வேலைவாங்குவார்களாம். தேவைப்படும் போது கூட பணம் கேட்டால் அவர்களுக்குக் கிடைப்பதில்லையாம்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட கலெக்டர் சேது ராமச்சந்திரன் உடனடியாக அவர்களைமீட்பதற்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்களைசொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications