For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொட்டும் மழையில் வீரப்பனை தேடும் அதிரடிப் படையினர்

By Staff
Google Oneindia Tamil News

முடிபடுகடா:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன் அம்மாநிலத்தின் முடிபடுகடா பகுதியில்நடமாடிக் கொண்டிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் அப்பகுதியைமுற்றுகையிட்டுள்ளனர். இது திம்பம் மலைப் பகுதிக்கு அருகில் தான் உள்ளது.

நேற்று அவன் திம்பம் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று கருதிய அதிரடிப்படை அதனைமுற்றகையிட்டது.

நாகப்பா கடத்தப்பட்டதற்கு உதவி செய்த மதநாயக் என்பவரை அதிரடிப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வீரப்பன் இருக்கும் இடம் குறித்து அவரிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத்அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மதநாயக் கூறியதன் அடிப்படையில் தற்போது வீரப்பன் முடிபடுகடா பகுதியில் தான் திரிவதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அப்பகுதியை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு வீரப்பன் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் வீரப்பனை விரைவில் பிடித்து விடுவோம் என்றுஅதிரடிப்படை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் அதிரடிப்படை முகாமை தமிழக டி.ஜி.பி. நெயில்வால் இன்றுபார்வையிட்டார். அவருடன் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரும் செனறார். இருவரும் இன்றும்தேவாரத்துடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழக-கர்நாடக எல்லை நெடுகிலும் உள்ள காட்டுப் பகுதியை அதிரடிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர் என்றும் வீரப்பன் இன்னும் கர்நாடக எல்லைக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றும் தமிழகபகுதிக்குள் நுழையவில்லை என்றும் நெயில்வால் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தேவாராம் கோரினால் கூடுதல் படைகளை அவருக்கு அனுப்புவோம் என்றார்.

கொட்டும் மழையில்..

இதற்கிடையே வீரப்பன் மறைந்துள்ளதாகக் கருதப்படும் காட்டுப் பகுதியில் தற்போது தொடர்ந்து கன மழைபெய்து வருகிறது.

ஆனாலும் அதையும் பொருட்படுத்தாது அதிரடிப்படையினர் தொடர்ந்து வீரப்பனைத் தேடும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.

வீரப்பனைப் பிடிப்பது தான் தங்களுடைய முதல் நோக்கம் என்று கூறும் அதிரடிப்படை வீரர்கள், அதே நேரத்தில்நாகப்பாவின் உயிருக்கும் ஆபத்து வராமல் அவரை மீட்க முயற்சிப்போம் என்றும் கூறினர்.

வீரப்பனுடன் பேச்சு நடத்த தயார்:

இதற்கிடையே நாகப்பாவை மீட்கும் முயற்சியில் வீரப்பனுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அரசுஅறிவித்துள்ளது.

வீரப்பனுடன் பேச்சு நடத்த யார் தயாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று அம்மாநிலசட்ட அமைச்சர் சந்திரே கவுடா இன்று நிருபர்களிடம் கூறினார்.

இருந்தாலும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினர் முழுமூச்சுடன் செயல்படுவார்கள் என்றும்அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X