For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""பட்ட கஷ்டம் போதும்"": காட்டுக்குள் செல்ல டாக்டர் பானு மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் விஷயத்தில் தலையிடவோ பேசவோ போவதில்லை என்றுடாக்டர் பானு கூறி விட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவரை மீட்கும் பணியில்டாக்டர் பானுவும் ஈடுபட்டார்.

காட்டுக்குள் சென்று ராஜ்குமாரைப் பார்த்த போது, அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல நடிக்கவேண்டுமென்று டாக்டர் பானு ஐடியா கொடுத்தார். முடிவில் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு காட்டை விட்டுவெளியே வந்த போது தூதர்களுடன் டாக்டர் பானுவும் இருந்தார்.

இந்நிலையில் தற்போது நாகப்பாவை மீட்கும் பணியிலும் ஈடுபடுவீர்களா என்று கேட்ட போது, "காலைக் கதிர்"நிருபரிடம் அவர் கூறியதாவது:

Bhanu with Rajkumar and S M Krishnaராஜ்குமாரை மீட்க நான் உதவி செய்ததால் எனக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்திரிக்கைகள் என்னைப் பற்றி தவறாகவே எழுதின. இதனால் என்னுடையகிரானைட் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன். இவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ நான்விரும்புகிறேன்.

உதவி செய்தால் பாதிப்புகள் வரும் என்பதை ராஜ்குமார் விஷயத்திலிருந்து தான் நான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். இனிமேலும் உதவி செய்து அதனால் பாதிப்புக்களைச் சந்திக்கும் அளவுக்கு என்னிடம் பலம் இல்லைஎன்றார் டாக்டர் பானு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X