வீரப்பனிடமிருந்து வந்த 2வது கேசட்
கொள்ளேகால்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரைக் கடத்திய வீரப்பன்2வது கேசட் ஒன்றை அனுப்பியுள்ளான்.
குண்டக்கல் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கரிடம் பழனியப்பா என்பவர்அந்தக் கேசட்டைக் கொடுத்துள்ளார்.
ஆனால் கேசட்டில் உள்ள விவரங்கள் குறித்து போலீசார் வெளியே தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இருப்பினும், காட்டுக்குள் தன்னைத் தீவிரமாகத் தேடி வரும் அதிரடிப்படையினர் அனைவரையும் வாபஸ்பெறாவிட்டால் நாகப்பாவை உயிருடன் பார்க்க முடியாது என்று இந்தக் கேசட்டில் மிரட்டியுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும் புதிதாக நான்கு நிபந்தனைகளையும் வீரப்பன் இந்தக் கேசட்டில் கூறியுள்ளான்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் கவனத்திற்கு இந்த 2வது கேசட் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணாகேட்ட பிறகு தான் கேசட்டில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே நாகப்பாவைக் கடத்திய போது வீரப்பன் கொடுத்த கேசட்டில் (முதல் கேசட்), தன்னுடையநிபந்தனைகளை ஏற்காவிட்டால் அவரைத் தலையை வெட்டிக் கொன்று விடப் போவதாக வீரப்பன்மிரட்டியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.