ஜெயலலிதா மீது வாசன் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருப்பதை முதல்வர் ஜெயலலிதாவால்பொறுத்துக் கொள்ள முடியாததால் தான் சோனியாவைத் தாக்கிப் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அகிலஇந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே. வாசன் கூறினார்.

முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே. மூப்பனாரின் முதலாவது நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், வாசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர்மூப்பனாரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஏழைகளுக்கு உதவிகளும் சமபந்தி விருந்தும் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் வாசன்பேசுகையில்,

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் சக்தியாக வருவதை ஜெயலலிதாவால் ஜீரணித்துக் கொள்ளவேமுடியவில்லை.

எனவே தான் சோனியா வெளிநாட்டவர் என்றும் இந்தியப் பிரதமராக அவர் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்றும் அவர் பேசி வருகிறார்.

இவ்வாறு பேசுவதை ஜெயலலிதா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முதல்வர் என்ற முறையில்அவர் மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும்என்றார் வாசன்.

ஜெ. கொடும்பாவி தொடர்ந்து எரிப்பு:

இதற்கிடையே சோனியாவைத் தாக்கி ஜெயலலிதா பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்றும்கொடும்பாவி எரிக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்ததற்காக திருச்சியில் 10 காங்கிரஸ் தொண்டர்களும், ஈரோடு மாவட்டம்அந்தியூரில் 19 காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+