சென்னை ஆட்டோ டிரைவரின் நேர்மை
சென்னை:
பயணிகள் ஆட்டோவில் தவற விட்ட ரூ.12 லட்சம் பணத்தை அப்படியே கொண்டு வந்து போலீஸாரிடம்கொடுத்துப் பாராட்டுப் பெற்றுள்ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
சென்னை வேப்பேரியிலிருந்து கே.கே. நகருக்கு 3 பேரை ஏற்றிக் காண்டு ஆட்டோ டிரைவர் மனோகரன்சென்றார். அவர்களை விட்டு விட்டுத் திரும்பும்போது ஆட்டோவில் சூட்கேஸ் இருப்பதைப் பார்த்தார் மனோகரன்.
திறந்து பார்த்தபோது, அதில் ரூ.12 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேப்பேரி காவல்நிலையத்திற்குப் போன மனோகரன் அங்கு போலீசாரிடம் சூட்கேஸை ஒப்படைத்தார்.
சம்பந்தப்பட்ட பயணிகளும் பின்னர் அடையாளம் காணப்பட்டனர். ஒரிசாவைச் சேர்ந்த அவர்கள் மனோகரனின்நேர்மையைப் பாராட்டி ரூ.10,000 அன்பளிப்பாக அளித்தனர்.
தொடர்ந்து போலீஸாரிடமிருந்தும் மனோகரனுக்கு நன்னடத்தை சான்றிதழும், பாட்ஜும் தரப்பட்டது. போலீஸார்அனைவரும் மனோகரனின் நேர்மையைப் பாராட்டினர்.