மீண்டும் "திகீர்" திருவிழா: பெண்களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் பூசாரிகள்
பரமக்குடி:
மதுரை மாவட்டம் பேரையூரில் சமீபத்தில் பரபரப்பூட்டிய குழி மாற்றுத் திருவிழாவை தொடர்ந்து ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அருகே கருமலையான் கோவில் பேய் ஓட்டுத் திருவிழாவும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பேரையூரில் பூப்பெய்தாத சிறுமிகளை, குழியில் ஒரு நிமிடம் வரை புதைத்து பின்னர் எடுக்கும் பயங்கரமானதிருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் பதவியை இழந்தார் துரைராஜ். அகில இந்தியஅளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்கள் சம்பந்தப்பட்ட மற்றொரு திருவிழாவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கருமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேய் ஓட்டும்திருவிழா நடைபெறுகிறது.
இந்த விழாவின்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்டு வருகிறார்கள். ஊர் மத்தியில் உள்ள ஒருமைதானத்தில் அப்பெண்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
பின்னர் கையில் சாட்டையுடன் கோவில் பூசாரிகள் வருவார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்குள்பேய் தான் இறங்கியுள்ளதாகக் கூறுகின்றனர். பேய் இறங்கியுள்ளதாக கூறப்படும் பெண்களை சாட்டையால்பூசாரிகள் சரமாரியாக அடிக்கிறார்கள்.
அடி வாங்கும் பெண்கள் அருகில் உள்ள குளத்தில் போய் விழுகிறார்கள். வெளியே வரும் போது அவர்களுக்குள்இருந்த "பேய்" குளத்தில் இறங்கி விட்டதாக கூறி, வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள் உறவினர்கள்.
இந்த திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் கூடிப் பார்க்கின்றனர். ஏராளமான பெண்கள் இந்த நிகழ்ச்சியின்போதுசாட்டையால் அடிக்கப்படுகின்றனர்.
குழி மாற்றுத் திருவிழா பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் பெண்களை சாட்டையால் அடிக்கும் இந்த பேய்ஓட்டும் திருவிழா மீண்டும் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.