அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்: சென்னையில் 1,000 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்களுடைய 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்தியஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், வேலைநிறுத்தத் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பை வாபஸ் பெற வேண்டும்ஆகியவை உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள்முடிவு செய்திருந்தனர்.

வருவாய்த்துறை, வணிகத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இன்றுமாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள "எழிலகம்" முன்பாக சுமார் 1,000 அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தைநடத்தினர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்த ஆயிரக்கணக்கான அரசுஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+