நாகப்பாவை மீட்க காட்டுக்குள் புகுந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

கொள்ளேகால்:

வீரப்பனால் கடத்தப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காக கிராம மக்கள் சிலர்காட்டுக்குள் புகுந்துள்ளனர்.

நாகப்பாவின் ஆதரவாளர்கள் பலர் அலூர், கேதர்பாளையம் மற்றும் பி.ஆர். மலை காட்டுப் பகுதிகளில் புகுந்துவீரப்பனையும் அவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் நாகப்பா விரைவில் உயிருடன் திரும்ப வேண்டும் என்று வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளும்நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மாடு மேய்ப்பதற்காகவும் விறகு வெட்டுவதற்காகவும் காட்டுக்குள் செல்பவர்களிடம் நாகப்பாவின்உறவினர்களும் நண்பர்களும் மாத்திரைகளைக் கொடுத்து, வீரப்பனைச் சந்தித்தால் நாகப்பாவுக்காக இந்தமாத்திரைகளைக் கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.

மைசூரில் பந்த்:

இதற்கிடையே நாகப்பாவை மீட்கக் கோரி இன்று மைசூரில் பந்த் நடைபெறுகிறது.

இந்த பந்த் காரணமாக மைசூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஹோட்டல்கள், சினிமாதியேட்டர்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்களும் ஓடவில்லை என்பதால் நகர்முழுவதும் பாலைவனம் போல காட்சியளிக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்துக்குபாஜகவும் ஆதரவு அளித்துள்ளது.

பந்த்தையொட்டி மைசூர் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் விரும்பத்தகாத சம்பவம்எதுவும் நிகழவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+