ஜெயாவுக்கு தேவர் சமுதாயத்தினர் உதவ பன்னீர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக தேவர் சமுதாய மக்கள் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் வெள்ளி விழாக் கட்டிடத்தைத் திறந்து வைத்து அவர்பேசுகையில்,
தேவர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது எம்.ஜி.ஆரும், அதற்குப் பிறகு ஜெயலலிதாவும் தான்.அதிமுக ஆட்சிக் காலங்களில் தான் தேவர் சமுதாய மக்களுக்கு நல்லதே நடந்தது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்து மரியாதை செய்தவர் எம்.ஜி.ஆர். தான். அவர் பெயரில்மாவட்டமும் அமைத்தார் எம்.ஜி.ஆர்.
அதிமுகவின் வளர்ச்சியில் தேவர் சமுதாய மக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஜெயலலிதாவுக்கும்உறுதுணையாக இருக்க வேண்டும் என்றர் பன்னீர்.
இந்நிகழ்ச்சியில் சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications