ஜெயாவுடன் நாகப்பா மனைவி சந்திப்பு ரத்து
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பாவின் மனைவி பரிமளாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்கவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பாவை மீட்பதற்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க பரிமளா திட்டமிட்டிருந்தார்.
பரிமளா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வந்து தன்னை சந்திக்கப் போவதாக ஜெயலலிதாவும் நேற்றுநிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பரிமளாவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் அதிகமாக அடித்துக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஜெயலலிதாவை அவர் சந்திக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடல் நிலை சரியானதும் இன்னொரு நாளில் ஜெயலலிதாவை பரிமளா சந்தித்துப் பேசுவார் என்று அவருடையகுடும்பத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications